பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – இன்றும் ராணுவ மருத்துவமனை அறிவிப்பு

 

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – இன்றும் ராணுவ மருத்துவமனை அறிவிப்பு

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்று இன்றும் டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – இன்றும் ராணுவ மருத்துவமனை அறிவிப்பு

 

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ராணுவ மருத்துவமனை அறிவித்தது. ஆனால், அவரது மகன் அவ்வப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அறிவித்து வருகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம் என்றே அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி நுரையீரலில் நோய்த்தொற்று அதிகரித்ததால் நிலைமை மோசம் அடைந்துள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சிலர் செய்தி பரப்பினர். இந்த நிலையில் ஆகஸ்ட் 21 இன்று டெல்லி ராணுவ மருத்துவமனை அவரது உடல் நலம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – இன்றும் ராணுவ மருத்துவமனை அறிவிப்பு
அதில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வென்டிலேட்டர் ஆதரவுடன் உள்ளார். அவரது உள் உறுப்புக்கள் இயல்பாக செயல்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – இன்றும் ராணுவ மருத்துவமனை அறிவிப்பு