’’விவசாயி இல்லை, விஷவாயு!’’ – எடப்பாடி பழனிச்சாமி மீது ஸ்டாலின் கடும் தாக்கு

 

’’விவசாயி இல்லை, விஷவாயு!’’ – எடப்பாடி பழனிச்சாமி மீது ஸ்டாலின் கடும் தாக்கு

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையிலேதான் அமைந்திக்கிறது. விவசாயியான நான் இதை உணர்ந்ததால்தான் இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறேன். ஆனால், இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று வேண்டுமென்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று சொல்லிவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

’’விவசாயி இல்லை, விஷவாயு!’’ – எடப்பாடி பழனிச்சாமி மீது ஸ்டாலின் கடும் தாக்கு

ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகளில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார் ஸ்டாலின். அதன்படியே இன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

’’விவசாயி இல்லை, விஷவாயு!’’ – எடப்பாடி பழனிச்சாமி மீது ஸ்டாலின் கடும் தாக்கு

காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப்பேசினார். அவர் பேசியபோது, ’’எடப்பாடி தன்னை விவசாயி விவசாயி என அடிக்கடி சொல்கிறாரே அவர் உண்மையிலேயே விவசாயியா? ’’என்று கேட்டவர்,

’’எடப்பாடி பழனிச்சாமி விவசாயி இல்லை, விஷவாயு!’’என்று கடுமையாக தாக்கிப்பேசினார்.