அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் அவகாசம் நீட்டிப்பு இல்லை… ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு

 

அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் அவகாசம் நீட்டிப்பு இல்லை… ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு

அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்பதால் வருகிற 10ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க சட்ட விதிகள்படி கட்சியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை

அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் அவகாசம் நீட்டிப்பு இல்லை… ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு

புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தலுக்கான நிறைவுப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கட்சியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்காக, கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளர்கள், தலைமை அலுவலகத்திலிருந்து பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து உரியக் கட்டணத்துடன், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் அவகாசம் நீட்டிப்பு இல்லை… ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு
எனவே, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு, உரிய காலத்துக்குள் இப்பணியை செய்து முடிக்க வேண்டும்.

அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் அவகாசம் நீட்டிப்பு இல்லை… ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு

உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பெற்றுள்ள கட்சித் தொண்டர்கள் மட்டுமே நடக்கவுள்ள கட்சியின் அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிக்கவும் தகுதியுடையவர் ஆவர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.