“முட்டை போடலேன்னு நண்பனையே போட்டார்” -சைடிஷ்க்காக நடந்த கொலை.

 

“முட்டை போடலேன்னு நண்பனையே போட்டார்” -சைடிஷ்க்காக நடந்த கொலை.


மது போதையில் இரு நண்பர்கள் போட்ட சண்டையில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்தார்
மகாராஷ்டிராவின் நாக்பூரில் மங்காப்பூர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் இரண்டு நண்பர்கள் சரக்கடிக்க உட்கார்ந்தனர் .அப்போது ஒரு நண்பரின் வீட்டில் நடந்த அந்த மது விருந்தில் சைடிஷ்ஷாக முட்டை கறி போடாததால் அந்த நண்பர் கோபமடைந்தார் .அப்போது அந்த நண்பரிடம் இது பற்றி கேட்டபோது அவர் ஏதேதோ கூறி சமாளித்துள்ளார் .

“முட்டை போடலேன்னு நண்பனையே போட்டார்” -சைடிஷ்க்காக நடந்த கொலை.


பிறகு இருவரும் தண்ணியடித்து விட்டு போதை தலைக்கேறியதும் இந்த முட்டை கறி சைடு டிஷ் சமாச்சாரத்தில் சண்டை போட தொடங்கினார்கள் .அப்போது ஒரு நண்பர் இன்னொருவரை கடுமையாக தாக்கியுள்ளார் .அதில் அந்த நண்பர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் ,பிறகு அவரின் உடலை அங்கேயே போட்டு விட்டு அவர் ஓடி விட்டார் .மறுநாள் போலீசாருக்கு இந்த கொலை பற்றி தகவல் தெரிந்ததும் விரைந்து வந்து விசாரணை மேற்க்கொண்டனர் .
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் “பனாரசி என்பவர் கெய்க்வாட்டை வெள்ளிக்கிழமை இரவு உணவிற்கு அழைத்தார். அப்போது அவர்கள் இருவரும் நள்ளிரவு வரை குடித்தனர் .அப்போது நடந்த சண்டையில் அவர் விருந்தினரிடம் முட்டை கறி தயாரிக்கவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து இருவரும் தகராறில் ஈடுபட தொடங்கினர். அப்போது கெய்க்வாட் பனரசியை ஒரு தடியால் தாக்கி கொலை செய்தார்” என்று மங்காபூர் காவல் நிலைய அதிகாரி கூறினார் .பிறகு போலீசார் கொலை செய்த கெய்க்வாட்டை சனிக்கிழமை கைது செய்தனர் .

“முட்டை போடலேன்னு நண்பனையே போட்டார்” -சைடிஷ்க்காக நடந்த கொலை.