குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்தும் முதல்வர் பொதுக்கூட்டத்திற்கு வராத பொதுமக்கள்!

 

குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்தும் முதல்வர் பொதுக்கூட்டத்திற்கு வராத பொதுமக்கள்!

முதல்வர் வருகைக்காக குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்தும், அதனை பார்க்க பொதுமக்கள் வராததால், காலி மைதானத்தை பார்த்து ஆட்டம் போட்டுவிட்டு ஆட்டக்காரர்கள் சென்றனர்.

குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்தும் முதல்வர் பொதுக்கூட்டத்திற்கு வராத பொதுமக்கள்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த நரிப்பையூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு கன்னிராஜபுரத்தில் உள்ளுர் பிரமுகர்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனிடையே கன்னிராஜபுரத்தில் முதல்வர் வருகைக்காக பொதுமக்களை கவர்வதற்கும், கூட்டத்தை பெருக்குவதற்கும் ஆட்டக்காரர்களை கூட்டிவந்து அதிமுகவினர் குத்தாட்டம் போட செய்தனர். ஆனால் கூட்டத்திற்கு பொதுமக்கள் யாரும் வராததால் ஆட்டக்காரர்கள் காலி மைதானத்தை பார்த்து, தாங்கள் வாங்கிய பணத்திற்கு குத்தாட்டம் போட்டு சென்றனர்