சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இல்லை! – கடம்பூர் ராஜூ பேட்டி

 

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இல்லை! – கடம்பூர் ராஜூ பேட்டி

தனக்கும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தேடப்பட்டு வந்தார். ஆனால் அவரை அமைச்சர் ஒருவர் காப்பாற்றி வேறு ஊருக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. அவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சருக்கும் தொடர்பு என்று செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து எல்லோரின் பார்வையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது விழுந்தது.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இல்லை! – கடம்பூர் ராஜூ பேட்டி
இது குறித்து இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஶ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னையும் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதரையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது” என்று கூறியுள்ளார்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இல்லை! – கடம்பூர் ராஜூ பேட்டிலாக்கப்பில் இறந்தால்தான் லாக்அப் டெத், கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தால் அது லாக்அப் டெத் இல்லை என்று விளக்கம் அளித்தவர் கடம்பூர் ராஜூ என்பது குறிப்பிடத்தக்கது.