பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 

பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

புரெவி புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

இந்நிலையில் புரெவி புயல் காரணமாக பாம்பனில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை தொடங்கியுள்ளது. அத்துடன் புயல் நெருங்கி வருவதால் புரெவி புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ள நிலையில் எச்சரிக்கையாக கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.