என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

 

என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு 3600 முதல் 4000 ரூபாய் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.3600 முதல் ரூ.4000 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் உணவு, வீட்டு வாடகை, சலவை படி வழங்கப்படும். ஊதிய உயர்வு பலன் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும்.

புதிய ஊதிய உயர்வு உடன்படிக்கை வரும் டிசம்பர் மாதம் முதல் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும். ஊதிய உயர்வால் பல்வேறு தொழிலகங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்’’கூறப்பட்டுள்ளது.