“இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குமாம்” : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

 

“இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குமாம்” : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குமாம்” : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரியிலும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குமாம்” : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.