புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி- நிர்மலா சீதாராமன்

 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி- நிர்மலா சீதாராமன்

பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இடம் பெயர் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பொதுப் பணித்துறை மூலமாக வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய திட்டம் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம். ஜூன் மாதம் 20ஆம் தேதி பீகாரில் முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி- நிர்மலா சீதாராமன்

பொருளாதார இழப்பை சீர்செய்ய மத்திய – மாநில‌ அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகின்றன. புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டன. 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெற்றனர். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார இழப்பை சரிகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.