உற்பத்தி துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

 

உற்பத்தி துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உற்பத்தி துறைக்கு 2 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் வழங்கப்படும். ஏசி, எல்.இ.டி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது. சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

உற்பத்தி துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

சமூக கட்டமைப்பு திட்டங்களில், பொருளாதார ஊக்கத்தை மேம்படுத்த, புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. தொழிற்சாலைகளின் உற்பத்தி சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறதோ, அதன் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படும். உற்பத்தியை அடிப்படையாக கொண்டு, ஊக்கத் தொகை அளிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.