நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.24.33 கோடியை மீட்டது பஞ்சாப் நேஷனல் வங்கி!

 

நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.24.33 கோடியை மீட்டது பஞ்சாப் நேஷனல் வங்கி!

தொழிலதிபர் நிரவ்மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில்  ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பியோடினார். அங்கு மாறு வேடத்தில் சுற்றித் திரிந்த நிரவ்மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு, லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மூன்று முறை மனுத் தாக்கல் செய்தும், அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.24.33 கோடியை மீட்டது பஞ்சாப் நேஷனல் வங்கி!

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு அவர் தரவேண்டிய அசல் மற்றும் வட்டியுடன் கூடிய ரூ.24.33 கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கி மீட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமின்றி பல்வேறு வங்கிகளில் நிரவ் மோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.