நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!

 

நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!

இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகளே இருக்கும் நிலையில் 11 புதிய கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!

இந்த நிலையில் நீலகிரியில் தொடங்க உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு நாளை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்த 11 மருத்துவக் கல்லூரிகளில் 10 கல்லூரிகளுக்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.