கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்

 

கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடமாடும் வாகன பிரசாரம் இன்று துவங்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்


இதனையொட்டி நீலகிரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் கலந்துகொண்டு கொடியசைத்து பிரசாரத்தை துவக்கிவைத்தார். இந்த வாகனம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஊட்டி தேனாடுகம்பை காவல் நிலைய போலீசார் சார்பில், கடநாட்டில் உள்ள பொதுமக்களுக்கு போக்குவரத்து மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.