கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்த நீலகிரி ஆட்சியர்!

 

கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்த நீலகிரி ஆட்சியர்!

நீலகிரி

குன்னூரில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கல்லூரி மாணவிகளுடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செல்பி எடுத்துக் கொண்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரந்தில் வாக்களிப்பது குறித்து, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு, வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து விளக்கம் அளித்தார்.

கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்த நீலகிரி ஆட்சியர்!

முன்னதாக, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆட்சியர் முன்னிலையில் உறுதி எடுத்துகொண்டனர்.

தொடர்ந்து, தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்லூரி வாளத்தில் அமைக்கப்பட்ட செல்பி ஸ்பாட்டியில் ஆட்சியருடன், இணைந்து கல்லூரி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.