கேரளா சென்று திரும்புவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம்!!

 

கேரளா சென்று திரும்புவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம்!!

கேரளா சென்று திரும்புபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்று அவசியம் என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கேரளா சென்று திரும்புவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம்!!

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, நிபா வைரஸ் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கேரள – தமிழக எல்லையோர மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக எல்லையோர சோதனை சாவடிகளில் சிறப்பு மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கேரளா சென்று திரும்புவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம்!!

இந்நிலையில் கேரளா சென்று திரும்பும் கூடலூர் பகுதி மக்களுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா சென்று திரும்புவோரால் நீலகிரி மாவட்டத்தில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு இருந்தாலும் நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே மீண்டும் தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலு சாமி தெரிவித்துள்ளார்.