தனிமைப்படுத்தப்பட்ட விடுதியின் குளியலறையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

 

தனிமைப்படுத்தப்பட்ட விடுதியின் குளியலறையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

பெங்களூரு சுப்பிரமணிய நகரில் வசிப்பவர் ஜெய்சங்கர். தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணி செய்யும் இவர் கடந்த மார்ச் மாதம் தனது உறவினரை சந்திக்க மும்பைக்கு சென்று இருந்தார். கடந்த வியாழக்கிழமை மீண்டும் மும்பையில் இருந்து பெங்களூர் திரும்பிய ஜெய்சங்கரை எச்.ஆர். ஆர் .பிரிவு 4 கொரோனா தனிமைப் படுத்தும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட விடுதியின் குளியலறையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

இந்நிலையில் ஜெய்சங்கர் கடந்த 19ஆம் தேதி 30 வயதான பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட விடுதியின் குளியலறையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

இவர் அங்குள்ள பொது குளியலறையில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் பெண் மும்பையிலிருந்து வந்ததால் ஏழுநாட்கள் தனிமைப்படுத்தும் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இது குறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் அதனடிப்படையில் லே-அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். இவர் இதேபோல 22 வயது பெண் ஒருவரை அவர் அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.