பங்குச் சந்தையில் ரூ.78 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது

 

பங்குச் சந்தையில் ரூ.78 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்ததகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. ஆசிய பங்குச் சந்கைளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. டாக்டர்ரெட்டீஸ் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. இம்மாதம் 25ம் தேதி முதல் உள்நாட்டில் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க இருப்பதால் இன்டர்குளோப், ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

பங்குச் சந்தையில் ரூ.78 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி., ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோமோட்டோகார்ப், மாருதி, பஜாஜ் ஆட்டோ மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்டஸ்இண்ட் வங்கி, என்.டி.பி.சி., பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தையில் ரூ.78 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,330 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 910 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.78 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114.29 புள்ளிகள் உயர்ந்து 30,932.90 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 39.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,106.25 புள்ளிகளில் முடிவுற்றது.