பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா!

 

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா!

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியை சேர்ந்த
அந்த அணியில் விளையாடிவரும் டி- மரியா, பரேடஸ் ஆகியோருக்கு கொரோனா உறுதியான நிலையில் கால்பந்துவீரர்கள் 3 பேரும் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களுடைய 2-வது போட்டியை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடை பெற இருந்த போட்டி அக்டோபர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா!

இந்த விடுமுறையை கொண்டாட நெய்மர் இபிஸா தீவுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.