கொரோனாவால் 2021 ஆம் ஆண்டு விபத்துகள் இல்லாத ஆண்டாக தொடங்கியது!

 

கொரோனாவால் 2021 ஆம் ஆண்டு விபத்துகள் இல்லாத ஆண்டாக தொடங்கியது!

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டதுடன் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டது. அதேபோல் சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையிலுள்ள மேம்பாலங்கள் இரவு மூடப்பட்ட நிலையில் தடையை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி ஈடுபடும் நபர்களை தடுக்கும் வகையில் மாவட்டத்தின் அனைத்து மேம்பாலங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பெரும்பாலான முக்கிய சாலைகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

கொரோனாவால் 2021 ஆம் ஆண்டு விபத்துகள் இல்லாத ஆண்டாக தொடங்கியது!

இதனால் இந்த ஆண்டு விபத்துக்கள் இல்லாத புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததையடுத்து சென்னையில் கடந்த 3 ஆண்டுகளை காட்டிலும் 2021 அதிக விபத்துக்கள் இல்லாத ஆண்டாக தொடங்கியது. அரசின் கட்டுப்பாடால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.