புதுமண தம்பதிகளுக்கு இறைச்சி சமைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்… தற்கொலையில் முடிந்த விபரீதம்!

 

புதுமண தம்பதிகளுக்கு இறைச்சி சமைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்… தற்கொலையில் முடிந்த விபரீதம்!

லக்கிம்பூர் மாவட்டத்தில் இறைச்சி சமைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சியில் மனைவி இறந்தாலும், கணவர் தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குரு தயால் (22) என்பவர் ரேஷ்மா(19) என்ற பெண்ணை ஜூன் 120ந்தேதி திருமணம் செய்து கொண்டார். ரேஷ்மா ஒரு வெஜிடேரியன். அதனால் தங்கள் வீட்டு சமலையலறையில் இறைச்சி சமைப்பதில் கணவனிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுமண தம்பதிகளுக்கு இறைச்சி சமைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்… தற்கொலையில் முடிந்த விபரீதம்!

அதனால் ரேஷ்மா வெளியில் வைத்து இறைச்சியை சமைக்குமாறு தன் கணவனிடம் கூறியுள்ளார். இதனால் குரு இறைச்சியை தான் தாயிடம் கொடுத்து சமையலறைக்குள் சமையலைத் தொடரும்படி கேட்டார். இதனால் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த குருவின் குடும்பத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ரேஷ்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குரு மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும், இதுவரை அறிக்கை பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.