திருமணமான இரண்டே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை!

 

திருமணமான இரண்டே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை!

திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான இரண்டே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். 26 வயதான இவர் பொள்ளாச்சியில் காபி பார் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த முனீஸ்வரி என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.சதீஷ்குமார் – முனீஸ்வரி தம்பதி கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று சதீஷ்குமார் தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து அவரது அறையில் சென்று பார்த்தபோது , அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

திருமணமான இரண்டே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை!

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ்குமார் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான இரண்டே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளதால் இது குறித்து தாராபுரம் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.