கோவையில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

கோவையில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை

கோவையில் திருமணமான ஒன்றை ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மனோகருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகாவை சேர்ந்த பூஜா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று காலை மனோகர் பணிக்கு புறப்பட்டு சென்றார்.

கோவையில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதனால் வீட்டில் தனியாக இருந்த பூஜா திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறப்பதற்கு முன்பாக பூஜா கன்னடத்தில் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

இதனை தொடர்ந்து, சடலத்தை பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், தற்கொலை சம்பவம் குறித்து கோவை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.