கணவர் ஊசி போட்டார் -மனைவி மயக்கம் போட்டார் -டாக்டர் வீட்டில் நடந்த சோகம் .

 

கணவர் ஊசி போட்டார் -மனைவி மயக்கம் போட்டார் -டாக்டர் வீட்டில் நடந்த சோகம் .


ஒரு டாக்டர் கணவன் தன்னுடைய மனைவிக்கு வைத்தியம் பார்த்தபோது மனைவி இறந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது

கணவர் ஊசி போட்டார் -மனைவி மயக்கம் போட்டார் -டாக்டர் வீட்டில் நடந்த சோகம் .


தமிழ்நாட்டின் மதுரையில் வசிக்கும் ஹரிணி என்ற 26 வயது மருத்துவ முதுகலை மாணவி தன்னோடு படித்த விக்னேஷ் என்ற மருத்துவ மாணவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .மேளா அனுபனாடியைச் சேர்ந்த அசோக் விக்னேஷ் அதே கல்லூரியில் முதுகலை மாணவர் ஆவார்.அந்த ஹரிணி மயக்க மருந்தியல் படிப்பில் முதுகலையில் படிக்கிறார் .
இந்நிலையில் மார்ச் 5ம் தேதி அந்த ஹரிணிக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டது .அதனால் அவருக்கு அவரின் டாக்டர் கணவரே வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்துள்ளார் .அப்போது அந்த கணவர், மனைவிக்கு ஒரு ஊசி போட்டார் .அந்த ஊசி செலுத்தியதும் ஹரிணிக்கு வாந்தி ,மயக்கம் ஏற்பட்டது .அதனால் அவரை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அதன் பிறகு ஹரிணி சிகிச்சை பலனளிக்கமால் சனிக்கிழமையன்று இறந்தார் .
இதனால் அந்த ஹரிணியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கூறினார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பின்னர் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. போலீசின் முதற்கட்ட விசாரணையின் போது சந்தேகத்திற்கிடமான எதுவும் இந்த மரணத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

கணவர் ஊசி போட்டார் -மனைவி மயக்கம் போட்டார் -டாக்டர் வீட்டில் நடந்த சோகம் .