“காதலர்களையும் வாழ விடாத வைரஸ்” -தற்கொலை செய்த கொரானா பாதித்த காதலியும் ,காதலனும் …

 

“காதலர்களையும் வாழ விடாத வைரஸ்” -தற்கொலை செய்த கொரானா பாதித்த காதலியும் ,காதலனும் …

கொரானாவால் ஏற்பட்ட நிதிநெருக்கடியால் வீட்டை விட்டு ஓடிவந்த காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலப்புழாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கேரள மாநிலம் ஆலப்புழாவில் வீட்டை விட்டு ஓடிவந்து தனியாக வாழ்ந்து வந்த காதல் தம்பதியினர் 25 வயது தேவிகாவும் ,30 வயது ஜிதினும் . இவர்களிருவரும் சென்னிதாலா பகுதியில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்துகொண்டு வீட்டினர் எதிர்ப்பை மீறி வாழ்ந்து வந்தனர் .ஜிதின் ஒரு பெயின்டிங் வேலை செய்பவர் .இந்நிலையில் கடந்த செவ்வாயன்று தேவிகாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது .இதனால் அவர் மனமுடைந்து மிக சோகமாக காட்சியளித்தார் .கணவர் வேலைக்கு சென்றதும் தேவிகா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் .

“காதலர்களையும் வாழ விடாத வைரஸ்” -தற்கொலை செய்த கொரானா பாதித்த காதலியும் ,காதலனும் …வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த ஜிதின் ,தம் வீட்டில் தனது காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து மனமுடைந்து அவரும் உடனே தற்கொலை செய்து கொண்டு இறந்தார் .
வியாழக்கிழமை வேலைக்கு வராத ஜித்தினை தேடி அவரின் பெயின்டிங் காண்ட்ராக்டர் வீட்டுக்கு வந்தபோது அவர்களின் வீட்டில் இருவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தந்தார் .

“காதலர்களையும் வாழ விடாத வைரஸ்” -தற்கொலை செய்த கொரானா பாதித்த காதலியும் ,காதலனும் …விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறர்கள் .தற்கொலைக்கு முன்பு தேவிகா எழுதியுள்ள தற்கொலை குறிப்பில் இந்த கொரானா காலத்தில் எங்களுக்கு சரியான வேலை இல்லாததால் ஏற்பட்ட கடுமையான நிதிநிலையால் வாழமுடியவில்லை என்று எழுதியுள்ளார் .