“ஆசை ஆறு நாள் ,மோகம் மூணு நாள்”-புருஷன் மீது புகாரளித்த நடிகை பூனம் பாண்டே

 

“ஆசை ஆறு நாள் ,மோகம் மூணு நாள்”-புருஷன் மீது புகாரளித்த நடிகை பூனம் பாண்டே

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே 2013 ஆம் ஆண்டில் நாஷா என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார்.அதில் ஆசிரியராக நடித்த அவர், தனது மாணவர்களில் ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் ரெடிஃப் என்ற பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பையுண்டு பண்ணினார்

“ஆசை ஆறு நாள் ,மோகம் மூணு நாள்”-புருஷன் மீது புகாரளித்த நடிகை பூனம் பாண்டே

இந்த படத்தின் கவர்ச்சியான போஸ்டர்களை பார்த்து கோபமடைந்த மக்கள் அந்த சுவரொட்டிகளைக் கிழித்து தீவைத்தனர் . மும்பையில் சிவசேனா கட்சியும் , ‘நாங்கள் இந்த சுவரொட்டியை மிகவும் மோசமானதாக காண்கிறோம், அத்தகைய ஆபாசத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியது
நடிகை பூனம் பாண்டே தனது காதலன் சாம் பாம்பேவை செப்டம்பர் 1, 2020 அன்று திருமணம் செய்து கொண்டார். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அவர்களது திருமணம் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர்கள் ,மும்பை வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது அவர்களின் இல்லற வாழக்கையில் பயல் வீசியுள்ளது .தெற்கு கோவாவின் கனகோனா கிராமத்தில் நடிகை பூனம் பாண்டேவை அவரின் கணவர் அடித்து கொடுமைபடுத்துவதாக அவர் தன்னுடைய கணவன் மீது திருமணமான 20 நாட்களுக்குள்ளாகவே போலீசில் புகாரளித்தார்.போலீசார் அவரின் புகாரை விசாரித்து அவரின் கணவரை கைது செய்துள்ளனர்

Poonam pandey colors indian telly awards.jpg