நெல்லை அருகே புதுமாப்பிள்ளை மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

 

நெல்லை அருகே புதுமாப்பிள்ளை மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

நெல்லை

நெல்லை மாவட்டம் பத்தமடையில் திருமணமாகி 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் திருச்சுணன். இவரது மகன் மதியழகன் (32). இவர் கேளராவில் பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மதியழகனுக்கும், சேரன்மகாதேவியை சேர்ந்த காஜல் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நெல்லை அருகே புதுமாப்பிள்ளை மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மதியழகன், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதியழகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பத்தமடை போலீசார், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், இதுகுறிதது திருச்சுணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.