ஓடும் பேருந்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதுமாப்பிள்ளை பலி!

 

ஓடும் பேருந்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதுமாப்பிள்ளை பலி!

திருச்சி

தொட்டியம் அருகே ஓடும் பேருந்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அழகு நாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(27). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே முத்துக்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்தியா என்பவரை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பணியின்போது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக முத்துக்குமார், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளர். தொடர்ந்து, நேற்று மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் தொட்டியத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.

ஓடும் பேருந்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதுமாப்பிள்ளை பலி!

பேருந்து தொட்டியம் முடக்குசாலை அருகே வந்தபோது, முத்துக் குமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.