இளைஞருடன் பேசியதை கிராமத்தினர் கண்டித்ததால், இளம்பெண் தற்கொலை!

 

இளைஞருடன் பேசியதை கிராமத்தினர் கண்டித்ததால், இளம்பெண் தற்கொலை!

கன்னியாகுமரி

குமரி அருகே வேறொரு ஆணுடன் பேசியதை, கிராமத்தினர் கணவரிடம் தெரிவித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அடுத்த வாழவிளை பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ். கூலி தொழிலாளி ஆன இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வெனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ரித்தீஷ், தற்போது திருச்செந்தூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இளைஞருடன் பேசியதை கிராமத்தினர் கண்டித்ததால், இளம்பெண் தற்கொலை!

இதனால் வெனிஷா, குழந்தையுடன் வாழவிளையில் வசித்து வந்தார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வெனிஷா, பக்கத்து வீட்டு இளைஞருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதி மக்கள் இருவரையும் பிடித்து, ரித்தீஷுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வெனிஷா, விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு வெனிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெனிஷாவுக்கு, திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து தக்கலை வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.