குடும்ப தகராறில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

 

குடும்ப தகராறில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் குடும்ப தகராறில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் யோசபாத். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த இசக்கியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதல் தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று யோசபாத், மீண்டும் இசக்கியாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

குடும்ப தகராறில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

இதனால் மனமுடைந்த இசக்கியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ராமேஸ்வரம் டிஎஸ்பி தீபக்சிவாச் தலைமையிலான பாம்பன் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து இசக்கியாவின் தந்தை ஜான் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே திருமணமாகி 3 மாதங்களில் புதுமணப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதால், வரதட்சணை கொடுமை காரணமா? என வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.