குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த ஏனாதி பிராடம்பட்டியை சேர்ந்தவர் செண்பகம். இவரது மகள் ராஜாத்தி (24). இவர் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரவிச்சந்திரன், குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜாத்தி, சம்பவத்தன்று வீட்டின் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து செண்பகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.