பணத்திற்காக நடத்தபட்ட போலி கல்யாணம்… நகை, பணத்துடன் அபேஸ் ஆன மணப்பெண்!

 

பணத்திற்காக நடத்தபட்ட போலி கல்யாணம்… நகை, பணத்துடன் அபேஸ் ஆன மணப்பெண்!

திருமணமான புதுப்பெண் புகுந்த வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் மாப்பிள்ளை வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அகமதாபத்தின் நரோடா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து மாப்பிள்ளை பெண்ணின் அப்பாவிடம் தெரிவித்த போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த கல்யாணம் பணத்திற்காகத்தான் நடத்தப்பட்டுள்ளது என்றும், ஓடிப்போன பெண் திரும்ப வரமாட்டார் என்றும் பெண்ணின் அப்பா மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து யாருக்காவது தெரியப்படுத்தினால் கொலை செய்துவிடுவதாகவும் பெண்ணின் அப்பா மாப்பிளையை மிரட்டியுள்ளார்.

பணத்திற்காக நடத்தபட்ட போலி கல்யாணம்… நகை, பணத்துடன் அபேஸ் ஆன மணப்பெண்!

பணத்தை பறிகொடுத்த அந்த நபரின் பெயர் ஜெயேஷ் ரத்தோடு. இவருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சஞ்ஜீத் என்பவரின் மகளுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பாக சில பணத்தேவை இருப்பதால் 1.5 லட்சம் தேவைப்படுவதாகவும், பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் வாங்கியுள்ளனர். மேலும் பணத்தை ஐந்து மாதங்களில் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். பின்னர் திருமணம் ஆன பிறகு பெண் நகை மற்றும் பணத்தை சுருட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மாப்பிள்ளை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.