கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

 

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் வசித்து வருபவர் காமராஜ்(26) – இவரது மனைவி ஷோபா(22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆவதற்கு முன்பு ஷோபாவுக்கும் வடமாநில பெண் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஷோபாவை பார்ப்பதற்காக அந்த பெண் வந்துள்ளார். காமராஜ் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்த அவர் பின்னர் சொந்த ஊருக்கு கிளம்புவதாக கூறிவிட்டு ரயில் நிலையம் சென்றுள்ளார்.

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஷோபாவும் காமராஜூம் அவரை வழியனுப்பி வைக்க உடன் சென்றுள்ளனர். ரயில் கிளம்ப சிறிது நேரத்துக்கு முன்பு தண்ணீர் பாட்டில் வாங்கி வருமாறு காமராஜிடம் அந்த வடமாநில இளம்பெண் கூறியதால் காமராஜ் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார். ரயில் உடனே புறப்பட்டு உள்ளது. அங்கு நின்றிருந்த ஷோபாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த காமராஜ் ரயில்வே போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கொல்கத்தாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணவனை ஏமாற்றி விட்டு தோழியை கடத்திச் சென்ற வடமாநில பெண்ணை பிடிக்கவும் ஷோபாவை அவரிடம் இருந்து மீட்கவும் போலீசார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.