‘தூக்கில் தொங்கிய கணவர்’ கழுத்தை அறுத்துக் கொண்ட மனைவி: புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

 

‘தூக்கில் தொங்கிய கணவர்’ கழுத்தை அறுத்துக் கொண்ட மனைவி: புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு. இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர், திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடனே, விஷ்ணு- ஷாலினி திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

‘தூக்கில் தொங்கிய கணவர்’ கழுத்தை அறுத்துக் கொண்ட மனைவி: புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

இந்த நிலையில் நேற்று முன் தினம் விஷ்ணுக்கும் ஷாலினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஷாலினி தன் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஷ்ணு, ஒரு அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டிருக்கிறார். சந்தேகமடைந்த அவரின் பெற்றோர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதற்குள் விஷ்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட ஷாலினி, அங்கேயே கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

உடனே ஷாலினியை மீட்ட பெற்றோர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விஷ்ணுவுக்கும் ஷாலினிக்கும் ஏற்பட்ட சண்டைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாலினியிடம் விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 20 நாட்களில் இந்த புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.