‘திருமணம் ஆகி மூன்றே மாதம்’ புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்!

 

‘திருமணம் ஆகி மூன்றே மாதம்’ புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்!

ஆப்பக்கூடல் அருகே திருமணமாகி 3 மாதத்தில் புதுமணத் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே இருக்கும் மல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 23). இவர் மெக்கானிக்கல் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்த நிலையில், அவருடன் ஒன்றாக படித்த ரம்யா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இளங்கோவும் ரம்யாவும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது, இளங்கோவும் ரம்யாவும் வெவ்வேறு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

‘திருமணம் ஆகி மூன்றே மாதம்’ புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்!

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுமணத் தம்பதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், இளங்கோவுக்கும் ரம்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இளங்கோ வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் அதனால் மனமுடைந்த இளங்கோவும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.