டெல்லி, கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட தடை!

 

டெல்லி, கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட தடை!

தமிழகத்தை தொடர்ந்து டெல்லி, கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட தடை!

கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களில் உள்ள சூழலை பொறுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட தடை!

இந்நிலையில் டெல்லியில் இன்று, நாளை இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2 நாட்களிலும் இரவு நேர ஊரடங்கின் போது, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இன்று இரவு 10 மணிக்கு மேல் எந்த கொண்டாட்டங்களும் நடைபெற கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூடவும், சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.