ஈரோடு- திம்பம் மலைப்பாதையில் புதிய அருவி
Sep 2, 2020, 12:22 IST1599029521000
ஈரோடு செப் 02
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மலைப்பாதை சுற்றுகளில் புதிதாக அருவிகள் தோன்றியுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை 27
கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகனப் போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திம்பம் மலைப்பகுதியில் கன மழை
பெய்யத்துவங்கியது இதனால் மலைப்பாதையின் சுற்றுகளில் உள்ள வளைவுகளில் புதிய அருவிகள் உருவானது. இதை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு ரசித்து சென்றனர். செய்தி;ரமேஷ்கந்தசாமி