புதுச்சேரியில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

 

புதுச்சேரியில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய வழிமுறைகளை பின்பற்றி காய்கறி கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் 50 நபர்களும் இறுதிச்சடங்குகளில் 25 நபர்களும் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

புதுச்சேரியில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

உணவு விடுதிகள், தேநீர் கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் நின்று கொண்ட பயணம் செய்ய அனுமதி இல்லை. கார் மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.