திமுகவில் உதயமாகும் புதிய பொறுப்புக்குழு

 

திமுகவில் உதயமாகும் புதிய பொறுப்புக்குழு


By subas Chandra bose
தேர்தல் களத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது திமுக. கட்சியைப் பலப்படுத்துவதற்காகவும், கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் திமுக இயங்கி வருகிறது. சமீப காலமாக இவை வடக்கு,தெற்கு, கிழக்கு மேற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இதற்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள் தற்போது புதிதாக உருவாகியுள்ள மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு அதற்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் கட்சி மேலிடம் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோஷ்டிப் பூசல்கள் இருக்கின்றன.

திமுகவில் உதயமாகும் புதிய பொறுப்புக்குழு

மதுரையில் ராஜன் செல்லப்பாவுக்கும் டாக்டர் சரவணனுக்கும் மோதல்… தென்காசி மாவட்டத்தில் மாநில வர்த்தகப் பிரிவு துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியனுக்கும், மாவட்டசெயலாளர் சிவபத்மநாபனுக்கும் மோதல் .. இப்படி ஏராளமான கோஷ்டிப்பூசல்கள் பற்றிய தகவல்கள். மேலிடத்திற்கு எட்டியுள்ளன.. மாநிலம் முழுவதும் ஏராளமான பேர் எம்.எல்.ஏ. சீட்டுக்கு அடிப்போடும் பட்சத்தில் இந்த மோதல்கள் உருவாகி வருகின்றன எனக் கணிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் உதயமாகும் புதிய பொறுப்புக்குழு


இந்தப் பிரச்னையை சமாளிக்க கட்சியில் புதிய பொறுப்புக்குழு ஒன்றை திமுக அமைக்கவிருக்கிறது மாநிலம் முழுவதும் மாவட்டங்கள் வாரியாக இந்த பொறுப்புக் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு பொறுப்புக் குழுவிலும் 6 பேருக்கு பதவிகள்ல தரப்பட்டு. மாவட்டங்கள் முழுவதும் யார், யார் கருத்து வேறுபாட்டில் இருக்கிறார்களோ அவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு இந்த பொறுப்புக் குழு பதவிகள் தரப்பட இருக்கின்றன.