புதிய நோயாளிகள் – பிரேசிலில் 14 ஆயிரம்… இந்தியாவில் 93 ஆயிரம் – உலகளவில் கொரோனா நிலவரம்
உலகளவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தொடர்ந்து இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. அதுவும் மற்ற நாடுகளை விடவும் பல மடங்கு அதிகமாய்..
செப்டம்பர் 14-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 91 லட்சத்து 88 ஆயிரத்து 603 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 679 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 28 ஆயிரத்து 325 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 72,28,599 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 67,08,458 பேரும், இந்தியாவில் 48,46,427 பேரும், பிரேசில் நாட்டில் 43,30,455 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.
அமெரிக்காவில் 31,857 பேரும், பிரேசிலில் 14,597 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 93,215 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியா மிகவும் அதிகம்.