“தியேட்டர்கள் திறந்தாலும் புதிய படங்கள் வெளியாகாது ” : இயக்குநர் பாரதிராஜா

 

“தியேட்டர்கள் திறந்தாலும் புதிய படங்கள் வெளியாகாது ” : இயக்குநர் பாரதிராஜா

தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் வெளியாகாது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

“தியேட்டர்கள் திறந்தாலும் புதிய படங்கள் வெளியாகாது ” : இயக்குநர் பாரதிராஜா

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது விபிஎஃப் சம்பந்தமாக அனைத்து தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புது திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த காலகட்டத்தை கருத்தில் கொண்டு, ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தீர்வு ஒன்று எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன்வைத்தோம். எனினும் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்கள் கலந்தாலோசித்து நல்ல தீர்வு ஏற்படும் வரை புது படங்களை வெளியிட முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார் .

“தியேட்டர்கள் திறந்தாலும் புதிய படங்கள் வெளியாகாது ” : இயக்குநர் பாரதிராஜா

விபிஎஃப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்தார். ஆனால், விபிஎஃப் கட்டணத்தை ஏற்க வேண்டும் என்ற நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜாவின் கோரிக்கையை தியேட்டர் அதிபர்கள் மறுத்தனர். அத்துடன் அனைத்து படங்களுக்கான லாபத்தில் 50% பங்கு அளித்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்பதாக அவர்கள் அறிவித்தனர். ஆனால் இதற்கு தயாரிப்பாளர்கள் உடன்படவில்லை.