“மோடியால் அது லடாக்… இல்லைனா அது பராக்” – திமுகவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பஞ்ச்!

 

“மோடியால் அது லடாக்… இல்லைனா அது பராக்” – திமுகவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பஞ்ச்!

கேரளாவில் ஓணம் திருவிழாவுக்குப் பின் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை சுட்டிக்காட்டி, மற்ற மாநிலங்கள் திருவிழாக்களில் அதிக தளர்வுகளை அளிக்காமல் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக கடிதமும் அனுப்பப்பட்டது. ஆகவே மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை அந்தந்த மாநில பாஜகவினர் எதிர்த்து வருகின்றனர் (பாம இவங்களே வைப்பாங்களாம்; இவங்களே கண்டுபிடிப்பாங்களாம்)

“மோடியால் அது லடாக்… இல்லைனா அது பராக்” – திமுகவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பஞ்ச்!

தற்போது பாஜகவினருடன் இணைந்து சமீபத்தில் மதுரை ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்ட ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரி சுவாமிகளும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிறது அரசு.

“மோடியால் அது லடாக்… இல்லைனா அது பராக்” – திமுகவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பஞ்ச்!

இதேபோல மற்ற மதங்களிலும் அவர் செயல்படுத்துவாரா. ஒவ்வொரு மதங்களிலும், பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவர்களுக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே, ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் புகுத்துவது தவறு. மத்தியில் மோடி அரசு இந்தியாவைப் பாதுகாத்து வருகிறது. மோடியின் செயல்பாட்டால் லடாக் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது; இல்லையென்றால் பராக் ஆகியிருக்கும். படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகின்றனரோ, இல்லையோ, ‘டாஸ்மாக்’ சென்று சரக்கு வாங்கு கின்றனர். இளைஞர்களை பாதுகாக்க மதுக்கடைகளை மூட வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் மற்றும் சினிமாவால் குழம்பியுள்ளனர்” என்றார்.