தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம்..தெய்வத் தமிழ்ப் பேரவை தீர்மானம்

 

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம்..தெய்வத் தமிழ்ப் பேரவை தீர்மானம்

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று காலை – குடந்தை வட்டம் – திருவேரகம் (சாமிமலை) – சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, இறைநெறி இமயவன் தலைமை தாங்கினார். தெய்வத் தமிழ்ப் பேரவை – ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் முன்னிலை வகித்தார்.

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம்..தெய்வத் தமிழ்ப் பேரவை தீர்மானம்

இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக – பூசை மொழியாக அறிவித்து தமிழ்நாடு அரசு புதிய சட்டமியற்ற வேண்டும். கடந்த காலங்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என சுற்றறிக்கையாகவும், அரசாணையாகவும் அறிவித்தார்கள். ஆனால், அது முறையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அந்தப் படிப்பினையை கற்றுக் கொண்டு, தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழில் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, சித்தர் வழிபாடு, நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையே புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. அவற்றை மேலும் செழுமைப்படுத்தி, அனைத்துக் கோயில்களிலும் தமிழை அர்ச்சனை மொழியாக்க வேண்டும்.
யாராவது விரும்பிக் கேட்டால் மட்டுமே சமற்கிருத மொழியில் அர்ச்சனை செய்யும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். இயல்பான அர்ச்சனை மொழியாகத் தமிழ் மொழியே இருக்க வேண்டும்.

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம்..தெய்வத் தமிழ்ப் பேரவை தீர்மானம்

தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு ஆகமங்கள் தடையில்லை என 2015 திசம்பர் 16ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இந்த மொழியில்தான் அர்ச்சனை நடக்க வேண்டும் என்றோ, இந்த சாதியில் பிறந்தவர் தான் அர்ச்சகர் ஆக முடியும் என்றோ ஆகமங்கள் நிபந்தனை விதிக்கவில்லை என அத்தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது. எனவே, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கொரு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை தமிழ்நாடு அரசு தொடங்கி, அப்பள்ளிகளில் தமிழ் வழிபாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும். ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200 பேரை அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை தமிழில் அர்ச்சனை நடத்தவும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்குவதையும் அறிவித்ததை எதிர்த்து ஒரு தனிநபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவ்வழக்கில் தெய்வத் தமிழ்ப் பேரவை தன்னையும் இணைத்துக் கொண்டு வழக்காடி, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம்..தெய்வத் தமிழ்ப் பேரவை தீர்மானம்

தமிழரின் சிவநெறிக்குப் புறம்பாக – தமிழ்ச் சமய வழிபாட்டுக்கு எதிராக – ஆன்மிகத்தையே கள்ள வாணிகம் போல் நடத்திக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின் மீது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈஷா யோகா மையத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து, சிவநெறிப்படி வழிபாடு நடத்த ஆவனசெய்ய வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறியவும், அவற்றைக் களையவும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்று, தமிழ்நாடு அரசு அதனடிப்படையில் விரைவாக செயல்பட வேண்டும்.