கொரோனாவைக் கொல்லும் மெஷின்..! ஆச்சரியப்படுத்தும் அதிசயம்.?!

 

கொரோனாவைக் கொல்லும் மெஷின்..! ஆச்சரியப்படுத்தும் அதிசயம்.?!

கொரோனாவால் உலகமே ஆட்டம் கண்டு போய் இருக்கும் சமயத்தில் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து வாடி வருகின்றனர். மறுபக்கம் இதே கொரோனாவை வைத்து பலர் பணம் பார்த்து வருகின்றனர். மாஸ்க் என்றால் என்னவென்றே தெரியாத நம் நாட்டு மக்கள் தற்போது தினம் ஒரு மாஸ்க் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். சானிடைஸர்கள், சோப்புகள் இவற்றின் வியாபாரம் விண்ணைத் தொட்டுள்ளது.

கொரோனாவைக் கொல்லும் மெஷின்..! ஆச்சரியப்படுத்தும் அதிசயம்.?!
மார்க்கெட்டில் டிசைனர் மாஸ்குகள், ப்ளூடூத் வசதி கொண்ட மாஸ்குகள் என்ற புதுபுதுசாக பொருட்கள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போது இதே பாணியில் கிருமிகளைக் கொள்ளும் ஏர் ஸ்டெரிலிசேஷன் கார்டுகள் என்று புது ஐட்டம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.
இவர்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில்
தொற்றுநோய்கால மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் இடமிருந்து 360 டிகிரி பாதுகாப்பு வழங்கும்.
உங்களைச் சுற்றி ஒரு மீட்டர் அளவுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும்.
எங்கு சென்றாலும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் (கார், அலுவலகம், கடைகள், வீடு)
சுலபமாக பயன்படுத்தலாம் மற்றும் எங்க வேணாலும் எடுத்துச் செல்லலாம்.
இந்த கார்டை 30 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இந்த கார்டுகளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
ஜப்பானியத் தயாரிப்பு.” என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனாவைக் கொல்லும் மெஷின்..! ஆச்சரியப்படுத்தும் அதிசயம்.?!
இந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணிற்கு போன் செய்து விசாரித்தபோது இந்த கார்டுகள் குளோரின் டை ஆக்சைடு பயன்படுத்தி நம் அருகில் உள்ள பாக்டீரியாவை முற்றிலுமாக அழித்துவிடும் என்று கூறினர். மேலும் இவற்றை கழுத்தில் ஐடி கார்டு போல தொங்க விட்டுக் கொள்ளலாம் என்றும் ஒரு மாதம் வரை ஒரு கார்டை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என அரசு துறைகளுமே இவற்றைப் பயன்படுத்துவதாக இந்த கார்டு விளம்பர தாரர்கள் தெரிவித்தனர்.
பயன்படுத்தியவர்கள் யாராவது இருந்தா ரெவியூ சொல்லிட்டுப் போங்க!