‘தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ்’ : இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு!

 

‘தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ்’ : இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு!

புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

‘தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ்’ : இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு!

இதுகுறித்து தமிழ் நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்கு தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்காகத்தான் . விபிஎஃப் சம்பந்தமான எங்களின் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக டிஜிட்டல் பிரொக்சன் நிறுவனங்கள் திடீரென்று விபிஎஃப் தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது.

‘தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ்’ : இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு!

திரையரங்குகள் உடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவிவரும் நிலையில் தயாரிப்பாளர்களையும் திரையரங்குகளையும் பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியை டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் வைத்திருந்தாலும் அது இரண்டு வாரங்களாவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி விபிஎஃப் கட்டணம் இல்லாத இந்த இரண்டு வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

‘தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ்’ : இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு!

அதேசமயம் விபிஎஃப் கட்டி படங்களை திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.