ஏழைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை தடுக்கும் புதிய கல்விக்கொள்கை! – கனிமொழி கண்டனம்

 

ஏழைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை தடுக்கும் புதிய கல்விக்கொள்கை! – கனிமொழி கண்டனம்

ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது என்று தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை தடுக்கும் புதிய கல்விக்கொள்கை! – கனிமொழி கண்டனம்
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது என்று நேற்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இலவச கல்வி, தாய்மொழி வழிக் கல்வி என்று கவர்ந்திழுக்கும் விஷயங்கள் இருந்தாலும் குலக்கல்வி, நுழைவுத் தேர்வு காரணமாக மாணவர்கள் உயர் கல்வி பெற முடியாத நிலை உருவாகும் என கல்வியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

ஏழைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை தடுக்கும் புதிய கல்விக்கொள்கை! – கனிமொழி கண்டனம்
தி.மு.க எம்.பி கனிமொழி இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா?

http://


புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.