மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் – W H O சொல்வது இதுதான்!

 

மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் – W H O சொல்வது இதுதான்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரத்து 380 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 46 லட்சத்து 19 ஆயிரத்து 686 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 17 லட்சத்து 09 ஆயிரத்து 474 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,14,11,220 பேர்.

மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் – W H O சொல்வது இதுதான்!

கொரோனாவின் தாக்குதலே இன்னும் முடியாத நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் தாக்கத் தொடங்கி விட்டது. பிரிட்டனில் இதன் தொடக்கம் அமைந்தது. அந்த நாட்டில் அதிவேகமாக புதிய வகை கொரோனா பரவியது. அடுத்து அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களுக்கு இந்த வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், ஆஸ்திரேலியா முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார மையம், “புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத ஒன்று அல்ல. முதலில் வந்த இதைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸையே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளது.

மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் – W H O சொல்வது இதுதான்!

இது சற்று ஆறுதலாகவும் இதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. பிரிட்டனோடு அனைத்து நாடுகளும் விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகை போக்குவரத்தையும் நிறுத்தி விட்டது.