‘பொய் வழக்கு போட்டு ஆடையை கலைந்து சித்ரவதை செய்தார்’ சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் ஸ்ரீதர் மீது புதிய புகார்!

 

‘பொய் வழக்கு போட்டு ஆடையை கலைந்து சித்ரவதை செய்தார்’ சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் ஸ்ரீதர் மீது புதிய புகார்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘பொய் வழக்கு போட்டு ஆடையை கலைந்து சித்ரவதை செய்தார்’ சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் ஸ்ரீதர் மீது புதிய புகார்!

அதன் பின்னர் இந்த வழக்கை சிபிஐ போலீசார் கையில் எடுத்த நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கைதான உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான காவலர் ஸ்ரீதர் மீது காவல் நிலையத்தில் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த யாக்கோபுராஜ் என்பவர், பொய் வழக்கு போட்டு ஆடையை கலைந்து சித்தரவதை செய்ததாக ஸ்ரீதர் மீது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.