கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரி நியமனம்!
Jun 30, 2020, 15:06 IST1593509788000
கடலூர் மாவட்டத்தின் தற்போது ஆட்சியராக இருப்பவர் அன்புச் செல்வன். இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதனால் கடலூருக்கு புதிய மாவட்ட ஆட்சியரை நியமிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.