புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

 

புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.திண்டுக்கல் சீலப்பாடி அருகே அன்னைநகரை சேர்ந்தவர் குமரகுருசாமி (24). இவரது மனைவி நிவேதா காமாட்சி (21).

புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நிவேதா காமாட்சி கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் நிவேதா காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஆர்.டி.ஓ உஷா மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.